ஏதோ அவன் சக்திக்கு ரெண்டே ரெண்டு லவ்வர் தான் வச்சிருக்கான்: 'காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர்!

நடிகர் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதன் முதலில் என்னிக்கு நீ என்கிட்ட உன் லவ்வ சொன்னியோ, அன்னியில் இருந்து தான் என வாழ்க்கையை அழகாக மாறியது என்றும், நான் முதன்முதலில் கண்ண பாத்து பேசிய முதல் பெண் நீதான் என்றும், மைனஸ் ஆகவே போய்க்கொண்டிருந்த என்னுடைய வாழ்க்கை பிளஸ் ஆக மாறியது உன்னால் தான் எனவும், ஒரு காதலியிடம் கூறும் வசனங்களை இரண்டு காதலிகள் முன்பு ஒரே நேரத்தில் விஜய் சேதுபதி கூறுவது அசத்தலாக உள்ளது.

மேலும் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து இரண்டு பேரிடமும் ஒரே நேரத்தில் காதலை சொல்லும் கேரக்டரில் விஜய் சேதுபதி அசத்தியுள்ளார். அதேபோல் விஜய்சேதுபதி கூறுவதை மாறி மாறி பார்த்து குழப்பத்தில் இருக்கும் நயன்தாரா மற்றும் சமந்தாவும் நடிப்பில் அசத்துகிறார்.

மொத்தத்தில் விக்னேஷ் சிவனின் பாணியில் ’நானும் ரவுடிதான்’ போல ஒரு வித்தியாசமான காதல் கதையாக தான் இந்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் இருக்கும் என இந்த டீசரில் இருந்து தெரிய வருகிறது.

More News

சசிகுமாரின் அடுத்த படத்தில் வில்லனாகும் 'சாத்தான்' விக்ராந்த்: திகில் வீடியோ

இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் அடுத்த படத்தில் விக்ராந்த் வில்லனாக நடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ திகிலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் 2 நாயகிகள்:  அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் என்பதை உறுதி செய்யும் வகையில் சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'வலிமை' படத்தை பார்த்தாரா அஜித்? வைரலாகும் புகைப்படம்!

 அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

நீட் தேர்வு மிகவும் அவசியமானது: பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த செந்தில்!

நீட் தேர்வு மிகவும் அவசியமானது என்றும் நீட்தேர்வு இருப்பதால் தான் அதிக அளவிலான மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கின்றனர் என்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகர் செந்தில் பேசியுள்ளார்.

இந்த மூன்று பேரும் கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு வரவேண்டும்: சிவகார்த்திகேயன் பேட்டி!

இந்த மூன்று வீரர்களும் சிஎஸ்கே அணிக்கு வரவேண்டும் என்று சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில்  கூறியுள்ளார்.