close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் 2 நாயகிகள்:  அதிகாரபூர்வ அறிவிப்பு!

Friday, February 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் என்பதை உறுதி செய்யும் வகையில் சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி தற்போது ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜெயம் ரவியின் 28வது திரைப்படத்தை ’பூலோகம்’ படத்தின் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் 28வது படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மட்டுமின்றி தன்யா ரவிச்சந்திரனும் நடிக்கவிருப்பதாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைப்பாளராக பணியாற்றுவார் என்றும் பல்லவி சிங் இந்த படத்தின் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.



மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலை 11 மணிக்கு வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.