விக்ரம்-அஜய்ஞானமுத்து படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

  • IndiaGlitz, [Tuesday,September 10 2019]

சீயான் விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ’டிமான்டி காலனி’, ’இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் விக்ரம் பத்துக்கும் மேற்பட்ட கேரக்டர்களில் நடிக்க உள்ள நிலையில் அவரது மேக்கப்பில் தனி கவனம் செலுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்துக்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளதாக சமீபத்தில் இயக்குனர் அஜய்ஞானமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 21ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த படத்தை வரும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படம் விக்ரமின் 58வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மாற்றுத்திறனாளிக்கான சிறப்புக்காட்சியில் அஜித்தின் விஸ்வாசம்!

ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான விழா கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 9 முதல் 11 வரை இந்த விழா கொண்டாடப்பட்டு வருகின்றது

விஷாலின் 'துப்பறிவாளன் 2' திரைப்படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு!

விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த இந்தப் படம் வசூல்

இலங்கையில் முதல்முறையாக 'பிகில்' திரைப்படம் செய்யும் சாதனை!

விஜய், அஜித் போன்ற மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் முண்டியடித்து செல்வர் என்பது தெரிந்ததே.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விஜய் ரசிகர் செய்யும் மகத்தான சேவை!

செஞ்சி அருகே விஜய் ரசிகர் ஒருவர் இலவசமாக அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக ஆட்டோ ஓட்டி வருகிறார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

இது பிக்பாஸ் நிகழ்ச்சியா? சீரியல் ஷூட்டிங்கா? ஆவேசமான மதுமிதா கணவர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டதால் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று மதுமிதா செய்தியாளர்களை