close
Choose your channels

விக்ரம்-அஜய்ஞானமுத்து படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Tuesday, September 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ’டிமான்டி காலனி’, ’இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் விக்ரம் பத்துக்கும் மேற்பட்ட கேரக்டர்களில் நடிக்க உள்ள நிலையில் அவரது மேக்கப்பில் தனி கவனம் செலுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்துக்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளதாக சமீபத்தில் இயக்குனர் அஜய்ஞானமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 21ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த படத்தை வரும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படம் விக்ரமின் 58வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.