close
Choose your channels

நெதர்லாந்தில் உணவகம் திறந்த சிஎஸ்கே வீரர்… விராட் கோலியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

Monday, June 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணியில் விளையாடி வந்த முன்னாள் வீரர் ஒருவர் நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் பிரம்மாண்ட உணவகம் ஒன்றை திறக்கவுள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு விராட் கோலி வரவேற்பு அளித்து வெளியிட்டுள்ள செய்தி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியில் முக்கிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இதுவரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 18 டெஸ்ட் போட்டி, 226 ஒருநாள் போட்டி, 78 டி20 போட்டிகளில் விளையாடி 7,988 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிக்காக சிஎஸ்கே அணியில் இணைந்து எம்.எஸ்.தோனி தலைமையில் விளையாடி வந்தார். இவருடைய அட்டகாசமான பேட்டிங்கால் பலமுறை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.

அந்த வகையில் 176 போட்டிகளில் சிஎஸ்கேவிற்காக களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா 4,687 ரன்களை குவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் 5 சீசன் போட்டிகளில் விளையாடிய இவர் 4 முறை அணி சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.

இப்படி இந்தியக் கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரராக அறியப்பட்ட சுரேஷ் ரெய்னா கடைசியாக 2021 இல் கிரிக்கெட்டில் இருந்து விலகிக்கொண்டார். தற்போது ஓய்வு பெற்றோர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் சமையல் மற்றும் உணவு மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தற்போது நெதர்லாந்து நாட்டிலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் பிரம்மாண்ட உணவகம் ஒன்றை திறக்க உள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டு உள்ளார்.

அதில் இந்திய முழுக்கவுள்ள பல்வேறு வகையான உணவுகளை ஐரோப்பாவின் மத்தியில் அமைந்திருக்கும் எனது ‘சுரேஷ் ரெய்னா இந்திய உணவகம்’ இல் அளிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த உணவகத்தின் திறப்பு விழா விரைவில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில் இதற்கு இந்தியக் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வரவேற்பை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் விராட் கோலி ‘நல்லது சகோ சுரேஷ் ரெய்னா வாழ்த்துகள். அடுத்த முறை ஆம்ஸ்டர்டாம் வரும்போது கண்டிப்பாக வருவோம்‘ என்று உறுதியளித்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் ரசிகர்கள் விராட் கோலியின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.

ஏற்கனவே இந்திய பிரபலங்களான நடிகை பிரியங்கா சோப்ரா, ஆஷா போஸ்லே போன்றோர் வெளிநாடுகளில் உணவகங்களைத் திறந்துள்ள நிலையில் சுரேஷ் ரெய்னா தனது பெயரில் திறந்திருக்கும் உணவகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.