கமல்-ரஜினி இருவரில் யாருக்கு மக்கள் வாக்களிப்பார்கள்: விஷால் கணிப்பு

  • IndiaGlitz, [Thursday,January 18 2018]

கோலிவுட்டின் இரண்டு பெரிய நடிகர்களான ரஜினி, கமல் ஆகிய இருவரும் ஒரே சமயத்தில் அதே நேரத்தில் தனித்தனியாக அரசியலில் களமிறங்குவதால் கோலிவுட் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இருவரில் யாரை ஆதரிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவர் மீது பொதுமக்களும், கோலிவுட் திரையுலகினர்களும் சம மதிப்பு, மரியாதை வைத்துள்ளதால் இந்த கேள்விக்கான விடை கணிக்க முடியாத அளவில் உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று நடைபெற்ற இந்தியா டுடே குழுமத்தின் கருத்தரங்கில் பேசிய நடிகர் விஷால் கூறியதாவது: ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக தாமதாக அறிவித்துள்ளனர். ஆனால் இந்த முடிவு மிகச்சரியான ஒன்றாகவே பார்க்க முடிகிறது. கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் களத்தில் உள்ள நிலையில் மக்கள் யாருக்கு வாய்ப்பளிப்பார்கள் என கணிக்க முடியாத சூழல் உள்ளது. ஆனால் வரும் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை எற்படுத்துவதாக அமைய போகிறது என்பது மட்டும் உறுதி” என்று கூறினார்.

மேலும் “பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்னைகள் பற்றி பேசிவரும் நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழகத்தில் போட்டியிட வேண்டும். அவரின் பங்களிப்பு நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆர்கே நகரில் எனது வேட்புமனுவை நிராகரித்து ஜனநாயக படுகொலை செய்தார்கள். ஆனால் அதுவே என்னை இன்னும் வலிமை ஆக்கியிருக்கிறது” என்று கூறினார்.

More News

வரும் தேர்தலில் ரஜினி, கமல், விஷால் செய்ய வேண்டியது என்ன? பிரகாஷ்ராஜ்

கடந்த சில மாதங்களாகவே அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக பிரதமர் மோடியை நேரடியாக தாக்கி பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

என்ன புரட்சி செய்கிறார்கள் என்று பார்க்கலாம்: கமல்-ரஜினியை கிண்டல் செய்த வைகோ

ரஜினிக்கும் கமலுக்கும் கடந்த சில மாதங்கள் வரை ஆதரவு கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது இருவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

10 நிமிடம் தாமதம் ஒரு குற்றமா? ஆசிரியர் தண்டனையால் பலியான சென்னை மாணவன்

சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததால் ஆசிரியர் கொடுத்த தண்டனையின் காரணமாக பரிதாபமாக பலியானார்

வைரமுத்து நாக்கை அறுத்தால் 10 கோடி ரூபாய்: முன்னாள் அமைச்சரின் சர்ச்சை பேச்சு

வைரமுத்து சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து பேசிய கருத்து சர்ச்சைக்குரியது என்றால் அதைவிட சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவரது எதிர்ப்பாளர்கள் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமல் அறிவிப்பு குறித்து அப்துல்கலாம் பேரன் தெரிவித்த கருத்து

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அறிவித்துவிட்டு அன்றைய தினமே மக்களை சந்திக்கவிருப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.