close
Choose your channels

வரும் தேர்தலில் ரஜினி, கமல், விஷால் செய்ய வேண்டியது என்ன? பிரகாஷ்ராஜ்

Thursday, January 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாகவே அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக பிரதமர் மோடியை நேரடியாக தாக்கி பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் ஐதரபாத்தில் நடைபெற்ற இந்தியா டுடே குழுமத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பிரகாஷ்ராஜ் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள். ரஜினி, கமல் மற்றும் விஷால் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன். கண்டிப்பாக இவர்களால் மக்கள் விரும்புவதை கொடுக்க முடியும் என நான் நம்புகிறேன்.

என்னை பொறுத்தவரை இவர்கள் மூவரின் கொள்கை என்பது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்பதாகவே இருக்கிறது. எனவே தேர்தலை சந்திக்கும் போது மூவரும் இணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக மக்கள் எப்போதும் கேள்வி கேட்காமல் வாக்களிப்பவர்களாக உள்ளார்கள். யார் தேர்தலில் நின்றாலும் மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அப்பொழுதுதான் தேவையானவற்றை பெற முடியும். நன்மை செய்யும் தலைவர்களை அடையாளம் காண முடியும்” என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.