விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,January 11 2020]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு ’ராட்சசன்’ மற்றும்’ சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. ஆனால் கடந்த ஆண்டு அவர் நடித்த எந்த ஒரு படமும் வெளியாகாதால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்து வரும் 'எப்.ஐ.ஆர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள விஷ்ணுவிஷால், இந்த படத்தின் டீசர் வரும் 26-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் ’பிகில்’ புகழ் ரெபா மோனிகா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கிவருகிறார். அஸ்வந்த் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் அடித்து கொலை செய்த 52 வயது நபர்!

கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்ற 52 வயது பெயிண்டர் ஒருவர் பெங்களூருக்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். அங்கேயே அவர் தங்கி வேலை செய்து வந்த போது ஸ்வேதா

வேறு மாநில நடிகரை ஆட்சி செய்ய விடமாட்டோம்: ஜாக்குவார் தங்கம்

சரவணன் அபுபக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள "எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்" திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நடைபெற்றது.

'தர்பார்' திரைப்படம் குறித்து லைகா அளித்த அதிர்ச்சி புகார் மனு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் 'தர்பார்' திரைப்படம் நேற்று முன்தினம் உலகம்

10 நாட்களாக குளிக்காத கணவன், விவாகரத்து கேட்கும் மனைவி!

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கணவர் 10 நாட்களாக குளிக்கவில்லை பல் துலக்கவில்லை, சேவ் செய்யவில்லை என்ற காரணத்திற்காக விவாகரத்து வேண்டும்

ரஜினி, கமல், விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஆதரவு? அரவிந்தசாமி

ஒரு பெரிய நடிகர் புகழுடன் இருப்பதற்கும், அவர் நல்லாட்சி தருவார் என்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று நடிகர் அரவிந்த்சாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.