பணமூட்டையை எடுத்து கொண்டு வெளியேறியது இந்த போட்டியாளரா? ஆச்சரிய தகவல்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் நடைபெற்று வரும் நிலையில் இன்று 100வது நாளாக ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இன்றைய தினம் பணமூட்டை அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அசீம், அமுதவாணன் ஆகிய ஆறு போட்டியாளர்களில் யாராவது ஒருவர் பணம் மூட்டையை எடுத்துக் கொண்டு வெளியேறலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதனை அடுத்து யார் பணமூட்டையுடன் வெளியேறுவார் என்ற கணிப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் கதிரவன் பணமூட்டையை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேர்களில் ஒருவர்தான் டைட்டில் வின்னர் என கூறப்படும் நிலையில் இவர்கள் மூவருமே பணமூட்டை எடுக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்பட்டது. அப்படி என்றால் மைனா, அமுதவாணன், கதிரவன் ஆகிய மூவரில் ஒருவர் பணம் மூட்டையை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மைனா தான் பணமூட்டையை எடுக்கப்போவதில்லை என ஏற்கனவே கூறியிருந்த நிலையில் பணமூட்டையை எடுப்பது அமுதவாணன் அல்லது கதிரவன் ஆகிய இருவரில் ஒருவராக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கணித்தனர். அந்த கணிப்பு சரியாகி உள்ள நிலையில் தற்போது கதிரவன் தான் பணமூட்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்று உள்ளார் என தெரியவருந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments