close
Choose your channels

பிக்பாஸ் போட்டியாளர்கள் கதறி அழும் காரணம்

Thursday, September 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட அதன் புரமோ வீடியோ சுவாரஸ்யமாக இருக்கின்றது. அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் சினேகன் உள்பட எல்லோரும் கதறி கதறி அழுகின்றனர். பின்னணியில் 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே, தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே' என்ற பாடல் ஒலித்து கொண்டிருக்கின்றது.

நேற்று வையாபுரியின் குடும்பத்தினர், பிந்துமாதவியின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது போல் இன்று சினேகனின் தந்தை வரவுள்ளதாகவும், சினேகன் அவருடைய தந்தையை 15 வருடங்களுக்கு பின்னர் இன்றுதான் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவேதான் தந்தையை நினைத்து சினேகன் அழ, அவரை பார்த்து பிக்பாஸ் குடும்பமே அழுது கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

எனவே இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி கண்ணீர் சிந்த வைக்கும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் பங்கேற்பாளர்கள் கிளிசரின் இல்லாமல் அழுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.