கைகொடுக்காத கட்டிப்பிடி வைத்தியம்: செண்ட்ராயன் பரிதாபம்

  • IndiaGlitz, [Tuesday,July 03 2018]

பிக்பாஸ் வீட்டின் தலைமை பொறுப்பு நேற்றுடன் நித்யாவுக்கு முடிவுக்கு வந்தது. இதுகுறித்த அறிவிப்பு வந்தவுடன் நித்யா மிகுந்த சந்தோஷம் அடைந்தார். அவர் கடந்த வாரம் தலைவியாக இருந்தபோது என்ன செய்தார் என்று பார்வையாளர்களுக்கும் தெரியவில்லை, போட்டியாளர்களுக்கும் தெரியவில்லை என்பது வேறு விஷயம்.

இந்த நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய செண்ட்ராயன், வைஷ்ணவி ஆகியோர்களுக்கு சீக்ரெட் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. யார் அதிகமாக மற்ற போட்டியாளர்களை கட்டிப்பிடிக்கின்றாரோ அவரே இந்த வார தலைவர். ஆனால் சீக்ரெட் என்பதன் அர்த்தம் தெரியாமலோ என்னவோ செண்ட்ராயன் அனைவரையும் தன்னை கட்டிபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் அவர் பரிதாபமாக தகுதியிழந்தார். எனவே வைஷ்ணவி இந்த வார தலைவியாக பொறுப்பேற்கிறார்

மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் எவிக்சன் பட்டியலும் தயாரானது. ஏற்கனவே இந்த பட்டியலில் நித்யா, அனந்து ஆகியோர் இருந்தனர். டேனியல், ரித்விகா ஆகியோர் டாஸ்க்கை சரியாத செய்ததால் எவிக்சன் பட்டியலில் சேர்க்க முடியாது. அதேபோல் தலைவி வைஷ்ணவியையும் சேர்க்க முடியாது என்பதால் மும்தாஜ், பொன்னம்பலம் மற்றும் பாலாஜி ஆகியோர் எவிக்சன் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டனர். எனவே நித்யா, அனந்து, பாலாஜி, பொன்னம்பலம், மும்தாஜ் ஆகியோர்களில் ஒருவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.

பாலாஜி, நித்யா சண்டையை வைத்து இன்னும் சில வாரங்கள் ஓட்ட வேண்டியிருப்பதால் இருவரும் வெளியேற வாய்ப்பு குறைவு. அதேபோல் மும்தாஜூக்கு பார்வையாளர்கள் மற்றும் மும்தாஜ் ஆர்மியினர்களின் ஆதரவு அதிகம் இருப்பதால் அவரும் வெளியேற்றப்பட வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. எனவே அனந்து அல்லது பொன்னம்பலம் ஆகிய இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பேப்பர் படித்து கொண்டே பஸ் ஓட்டும் சென்னை மாநகர பேருந்து டிரைவர்

சென்னையை சேர்ந்த மாநகர் பேருந்தை ஓட்டும் டிரைவர் ஒரு செய்தித்தாளை படித்து கொண்டே பேருந்தை ஓட்டிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சூர்யாவின் அடுத்த படத்தில் ஆர்யா?

'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த நடிகர் சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

அரைநிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய 'பாலா' நாயகி

இயக்குனர் பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தின் நாயகிகளில் ஒருவர் மதுஷாலினி. இவர் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை: காரணம் என்ன?

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல அரசியல் தலைவரை சந்தித்த லதாரஜினிகாந்த்

இன்று ரஜினியின் மனைவி லதா ரஜினி மும்பையில் பிரபல அரசியல்வாதியான ராஜ்தாக்கரே மற்றும் அவருடைய மனைவி ஷர்மிளா ஆகியோர்களை சந்தித்து பேசியுள்ளார்.