வில்லன் வேடத்தை விஷால் விரும்பியது ஏன்? இயக்குனர் மித்ரன்

  • IndiaGlitz, [Friday,December 15 2017]

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றின் இடைவிடாத பணிகளுக்கு இடையே விஷால் நடித்து வரும் திரைப்படம் 'இரும்புத்திரை'. இந்த படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மித்ரன் சில சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.

இயக்குனர் மித்ரன் கூறியதாவது: இரும்புத்திரை படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் சொல்லும் போது அவர் இந்த கதை பிடித்திருந்தால் விஷால் பிலிம் பேக்டரியின் மூலம் வேறு யாரையாவது கதாநயாகனாக  வைத்து இப்படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கதையை கேட்டார். நான் கதையை சொல்லி முடித்ததும் இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் நானே நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன். நாம இந்த படத்தை பண்றோம். ஆனால் நான் வில்லன் வேடத்தில் தான் நடிப்பேன் என்றார். நான் தான் அவரிடம் பேசி அவரை ஹீரோ வேடத்தில் தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்றேன். அந்த அளவுக்கு படத்தில் வில்லன் வேடம் வலிமையானதாக இருக்கும்' என்று கூறினார். விஷால் விரும்பிய அந்த வில்லன் வேடத்தில் தான் ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஷாலின் கேரக்டர் குறித்து இயக்குனர் மித்ரன் கூறியபோது, 'விஷால் போன்ற மிகப்பெரிய ஸ்டார் ஹீரோ என்னும் போது அவருக்காக படத்தில் நிறைய மாற்றங்கள் செய்தேன். முதலில் நம்மை போன்ற சாதாரணமான ஒரு கதாபாத்திரமாக இருந்த நாயகனின் கதாபாத்திரத்தை விஷாலுக்காக ‘ மிலிட்டரி மேன் கதாபாத்திரமாக மாற்றினேன். இப்படம் சமூகவலைதளத்தில் நமக்கு தெரியாமல் நடக்கும் நிறைய மருமங்களை பற்றியும் அது ஏற்படுத்தும் விளைவு பற்றியும். இன்னும் நாம் அறியாத பல விஷயங்களை பற்றியும் பேசும் படமாக இருக்கும். அதை நான் மிலிட்டரி பேக் டிராபை கொண்டு உருவாக்கியுள்ளேன். 

மேலும் இந்த படத்தின் நாயகி சமந்தா கேரக்டர் குறித்து அவர் மேலும் கூறியபோது, 'இந்த படத்தில் சமந்தாவுக்கு முக்கியமான கதாபாத்திரம். அதை பற்றி இப்போது கூற முடியாது. நிச்சயம் வழக்கம் போல் வரும் கதாநாயகியின் காதாபாத்திரம் போல் இல்லாமல் கதையில் முக்கியமான கதாபாத்திரமாக அவருடைய கேரக்டர் இருக்கும்' என்று இயக்குனர் மித்ரன் கூறினார்.

More News

பெரியபாண்டி குடும்பத்துக்கு நிதி திரட்ட ஆரம்பிக்கப்பட்ட வங்கிக்கணக்கு திடீர் மூடல்

ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த பெரியபாண்டிக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி அவரது மகனின் முழு கல்விச்செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.

ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் அனைத்து ஆவணங்களிலும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

இளைஞர்களை ஊக்குவிக்க விஜய் தவறியதே இல்லை: சிபிராஜ்

சிபிராஜ் நடித்த 'சத்யா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

ரியல் தீரன் குடும்பத்தினர்களுக்கு ரீல் தீரன் ஆறுதல்

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் இருந்த பெரியபாண்டியன் சமீபத்தில் ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பொங்கல் விருந்தாக வெளிவருமா சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்'?

விக்ரம் நடிப்பில் விஜய்சந்தர் இயக்கி வந்த 'ஸ்கெட்ச்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்