close
Choose your channels

அந்த ரூ.3 லட்சம் பெட்டியை எடுத்து வெளியேறுவது நிரூப்பா?

Tuesday, January 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதும் இதில் நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் அடுத்த வாரம் இறுதி போட்டிக்கு செல்லும் நபர்கள் யார் என்பது தெரிந்து விடும் என்ற நிலையில் இன்று திடீரென 3 லட்ச ரூபாய் பேட்டி பிக்பாஸ் வீட்டில் வருகிறது.

இந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஒருவர் வெளியே செல்லலாம் என பிக்பாஸ் தெரிவித்துள்ள நிலையில் அந்தப் பெட்டியை யார் எடுத்துச் செல்வார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புரமோ வீடியோவில் அந்த பெட்டியை நான் எடுத்தாலும் எடுத்து விடுவேன் என்றும் இதுவரை இந்த நிகழ்ச்சியில் வந்ததே பெரிய விஷயம் என்றும் அதை எடுத்துக்கொண்டு வெளியே செல்வதால் எந்த வித தவறும் இல்லை என்றும் நிரூப் தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் காட்சிகள் உள்ளன.

மேலும் தாமரை இடமும் அவர் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்றும் கூறுவதை பார்க்கும்போது நிரூப் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இன்றைய நிகழ்ச்சியில் மூன்று லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்வது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.