close
Choose your channels

பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்: மூவர் கைது

Monday, April 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது சொந்த ஊருக்கு நடந்து சென்ற பெண் ஒருவர் இரவில் பள்ளி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அவர் அந்த பள்ளியில் மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து இல்லாததால் கால்நடையாகவே தனது சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அவர் வழி தவறி சென்று விட்டதாக தெரிகிறது

இதனை அடுத்து அந்த பகுதி போலீசார் அவரிடம் விசாரணை செய்து அவரை இரவில் ஒரு பள்ளியில் தங்குமாறு அறிவுறுத்தினார். மறுநாள் காலை அவரது சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்வதாகவும் கூறினர். இந்த நிலையில் அன்றைய தினம் இரவு அந்த பெண் போலீசாரின் அறிவுரையின்படி பள்ளியில் தங்கியிருந்த நிலையில் உள்ளூரைச் சேர்ந்த மூவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்

மேலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதற்காக பரிசோதனை செய்ய முடிவு செய்த போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போலீசாரால் பள்ளியில் தங்க வைக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.