close
Choose your channels

மருமகளின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மாமியாருக்கு நேர்ந்த கொடுமை!

Friday, January 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னுடைய கள்ளக்காதலை மாமியார் தட்டிக் கேட்டதால் மாமியாரை கொலை செய்ய மருமகளும் அவருடைய கள்ளக்காதலனும் சேர்ந்து செய்த முயற்சியால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜூஞ்ஜூ என்ற மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் அவர் ஒரு சில நாட்களில் ராணுவ பணிக்கு திரும்பிவிட்டார். இந்த நிலையில் அவருடைய மனைவியும் மாமியாரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இதனையடுத்து நாளடைவில் ராணுவ வீரரின் மனைவிக்கு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த நபருடன் மருமகள் போனில் அடிக்கடி பேசிக்கொண்டிருந்ததை மாமியார் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகள் தனது மாமியாரை கொலை செய்ய தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தால் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்து அதன்படி மாமியாரை பாம்பை கடிக்க வைத்து இருவரும் கொலை செய்துள்ளனர்.

இதனை அடுத்து மாமியாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இதுகுறித்து போலீசார்களிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தங்களது பாணியில் மருமகளை விசாரித்தனர். அப்போது அவர் தனது கள்ளக்காதலனுடன் இணைந்து மாமியாரை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மருமகளையும் அவருடைய காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதலனுக்காக மாமியாரை கொலை செய்த மருமகளின் கொடூரத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.