close
Choose your channels

பால்காரருடன் கள்ளக்காதல்: கணவனை கொலை செய்ய முயன்ற மனைவியால் பரபரப்பு

Monday, February 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோவையில் பால்காரருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் கணவனை கொலை செய்ய முயன்ற மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோவையை சேர்ந்த குமார் என்பவரும் சங்கீதா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி சங்கீதாவை அடித்து துன்புறுத்தி உள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் சங்கீதா வீட்டிற்கு தினமும் பால் ஊற்ற வரும் பிரபு என்பவரிடம் தனது கணவரின் குடிப்பழக்கத்தை சொல்லி சங்கீதா புலம்பி இருக்கிறார். பிரபுவும் சங்கீதாவுக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்த நிலையில் சங்கீதா பிரபு ஆகிய இருவருக்கும் நட்பாகி அதன் பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வெளியூர் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்ற சங்கீதம் குழந்தைகளை தாயிடம் ஒப்படைத்துவிட்டு பலமுறை பிரபுவுடன் அவர் ஊர் சுற்றியதாக தெரிகிறது

இந்த நிலையில் குமார் அடிக்கடி சங்கீதாவை சந்தித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனை தொந்தரவாக கருதிய சங்கீதா கள்ளக்காதலன் பிரபுவுடன் கூறியுள்ளார். அதன் பின்னர் இருவரும் குமாரை கொலை செய்ய முடிவு செய்திருக்கின்றனர். குமார் முழு போதையில் வீட்டில் இருந்தபோது அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றபோது அவர் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்தபோது சங்கீதா, பிரபு ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர்

அதன்பின்னர் கழுத்தில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு மற்றும் சங்கீதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கட்டிய கணவனை மனைவியே கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.