close
Choose your channels

ரஜினி, கமல் பட வசனகர்த்தாவை தாக்கிய மளிகைக்கடைக்காரர்

Saturday, June 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0', உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்', விஜய் நடித்த 'சர்கார்' உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தாவும் பிரபல எழுத்தாளருமானவர் ஜெயமோகன். இவரை கன்னியாகுமரியை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் ஒருவர் தாக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் செல்வம் என்பவர் மளிகைக்கடை வைத்துள்ளார். இவரிடம் எழுத்தாளர் ஜெயமோகன் தோசை மாவு வாங்கியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் கடைக்கு திரும்பி வந்த ஜெயமோகன், செல்வம் கொடுத்த தோசை மாவு மோசமாக இருந்ததாக கூறி திருப்பிக்கொடுத்துள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி ஜெயமோகனை செல்வம் தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து ஜெயமோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.