தனுஷ் பட தயாரிப்பு நிறுவனத்தின் பரபரப்பு அறிக்கை!

  • IndiaGlitz, [Wednesday,December 18 2019]

தனுஷ் நடிப்பில் இயக்குனர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனுஷின் 40வது படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் தனுஷ் நடித்து வருவதாகவும் இந்த காட்சிகளில் அவருக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜன் என்பவர் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

முன்னதாக இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. தனுஷ் மற்றும் இந்த படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’சுருளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்து இந்நிறுவனத்தின் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

இதன்படி தனுஷ் நடித்துவரும் 40வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வமான டைட்டில் வரும் பிப்ரவரி மாதம் வெளியிட இருப்பதாகவும், தற்போது பரவி வரும் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமற்றது என்றும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சுருளி என்ற டைட்டில் இந்த படத்திற்கு உறுதி செய்யப்படவில்லை என்று தெரிகிறது

More News

விஜய்சேதுபதிக்கு விருதில்லை என்றால் விருதுக்கே பெருமையில்லை: பிரபல ஒளிப்பதிவாளர்

விஜய் சேதுபதிக்கு விருது இல்லை என்றால் அந்த விருதுக்கு பெருமை இல்லை என்று பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அஜித் வீட்டில் ரெய்டு நடந்தது உண்மையா? வனத்துறை அதிகாரி விளக்கம்

அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜித் ஹைதராபாத் சென்றுள்ளார்.

மாணவர்களை அகதிகள் ஆக்கும் அரசு: சென்னை பல்கலையில் கமல்ஹாசன் பேச்சு

குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் போராடி வரும் நிலையில் இன்று போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை கமலஹாசன் அவர்கள் நேரில் சந்தித்தார் 

இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் இரத்த சொந்தங்கள்: பிரபல நடிகர்

மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ராஜ்கிரண்

குடியுரிமை ரத்தானால் ஒரு பிரச்சனையும் இல்லை: எங்களுக்கு என ஒரு நாடு இருக்குது: சீமான்

குடியுரிமை ரத்து ஆனால் நித்தியானந்தாவின் கைலாஷ் நாட்டிற்கு சென்று விடுவோம் என நடிகரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது