close
Choose your channels

அஜித் வீட்டில் ரெய்டு நடந்தது உண்மையா? வனத்துறை அதிகாரி விளக்கம்

Wednesday, December 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜித் ஹைதராபாத் சென்றுள்ளார். இந்த நிலையில் அஜீத் வீட்டில் திடீரென சோதனை நடந்து வருவதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.

அஜித் வீட்டில் மட்டுமின்றி அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா வீட்டிலும் சோதனை நடந்ததாகவும், சட்டவிரோதமாக மலைப்பாம்பு வளர்த்து வருவதால் இந்த சோதனை என்றும் அந்த வதந்தி பரவியது

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த சென்னை வனத்துறை தலைமையிட வனசரகர் நடிகர் அஜித் வீட்டில் சோதனை என வெளியான செய்தி தவறானது என்றும் அப்படி ஒரு சோதனை நடக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதனையடுத்து அஜித் மற்றும் அவரது மேனேஜர் வீட்டில் சோதனை நடந்தது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.