close
Choose your channels

தனுஷ் பட தயாரிப்பு நிறுவனத்தின் பரபரப்பு அறிக்கை!

Wednesday, December 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் இயக்குனர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனுஷின் 40வது படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் தனுஷ் நடித்து வருவதாகவும் இந்த காட்சிகளில் அவருக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜன் என்பவர் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

முன்னதாக இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. தனுஷ் மற்றும் இந்த படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’சுருளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்து இந்நிறுவனத்தின் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

இதன்படி தனுஷ் நடித்துவரும் 40வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வமான டைட்டில் வரும் பிப்ரவரி மாதம் வெளியிட இருப்பதாகவும், தற்போது பரவி வரும் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமற்றது என்றும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சுருளி என்ற டைட்டில் இந்த படத்திற்கு உறுதி செய்யப்படவில்லை என்று தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.