close
Choose your channels

கொல்லிமலையில் 'யார்க்கர் மன்னன்' நடராஜன்: உடன் சென்றவர்கள் யார் யார் தெரியுமா?

Saturday, April 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்று கலக்கி வருகிறார் என்பதும் சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலிய தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் கடைசி ஓவரை அசத்தலாக வீசி, இந்திய அணி போட்டியையும் தொடரையும் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடராஜனின் அபாரமான ஆட்டத்திற்கு பரிசாக மஹிந்திரா நிறுவனம் கார் ஒன்றை பரிசாக அளித்தது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் அவரது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் தற்போது நடராஜன் தனது மனைவி, குழந்தை, மற்றும் நண்பர்களுடன் கொல்லிமலைக்கு சென்று உள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த அசத்தலான புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

’வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களையும் சிறந்த சாகசங்களையும் கொண்டது’ என்று அவர் கேப்ஷனாக இந்த புகைப்படங்களுக்கு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.