close
Choose your channels

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் மரணம்!

Friday, June 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வெள்ளிக்கிழமையன்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு 8 மணியளவில் தேன்மொழி என்ற இளம் பெண்ணும் அவரது காதலர் என்று கூறப்படும் சுரேந்தா் என்பவரும் ஆவேசமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் அவர்களது வாக்குவாதம் முற்றியது. அந்த நேரத்தில் ஆத்திரம் அடைந்த சுரேந்தா், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தேன்மொழியை சரமாரியாக வெட்டிவிட்டு, அந்த பக்கமாக வந்த ரயில் முன் குதித்து தற்கொலைக்கும் முயன்றார்.

இதனையடுத்து படுகாயம் அடைந்த சுரேந்தர், தேன்மொழி ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தேன்மொழி குணமடைந்து வந்த நிலையில் சுரேந்தர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேந்தர் சற்றுமுன் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கை சென்னை எழும்பூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.