பிறந்த நாளன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்…

 

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தன்னுடைய பிறந்த நாளன்று டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். மேலும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் சமூகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் தனது தந்தை விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொணடு ஆத்திரத்துடன் வெளிப்படுத்திய வார்த்தைகள் தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகிராஜ் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு சில கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தார். அதில் போராட்டத்தை வலிமையாக்க வேண்டும் என்றால் மத்திய அரசு வழங்கிய விருதுகளை விளையாட்டு வீரர்கள் திரும்ப கொடுக்க வேண்டும் என்று முழ்க்கமிட்டார். இந்த கருத்து பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்தில் இருந்து தான் வேறுபடுவதாக யுவராஜ் சிங் தற்போது விளக்கம் அளித்து இருப்பதோடு தனது தந்தையின் சித்தாந்தத்தில் இருந்து, தான் விலகி நிற்பதாகவும் கூறி இருக்கிறார்.

39 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் யுவராஜ் சிங், தனது டிவிட்டர் பக்கத்தில் “சந்தேகத்திற்கு இடமின்றி விவசாயிகள் தேசத்தின் உயிர்நாடி. அமைதியான உரையாடலின் மூலம் அவர்கள் தங்கள் பிரச்சனையை தீர்க்க முடியும்” என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், “பிறந்த நாள் என்பது ஒரு விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகும். இந்த பிறந்தநாளை கொண்டாடுவதை விட நம் விவசாயிகளுக்கும் நம் அரசாங்கத்திற்கும் இடையில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு விரைவாக தீர்வு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பிரார்த்தனை செய்கிறேன்” எனப் பதிவிட்டு உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவராஜ்சிங்கின் தந்தையான யோகிராஜ் சிங், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி சில கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். அதில் “விவசாயிகள் சரியானதைக் கோருகிறார்கள். அரசாங்கம் அவற்றைக் கேட்க வேண்டும். இது தொடர்பாக அரசாங்கம் தீர்வுகளை கொண்டு வரவேண்டும் என்பது மிகவும் அவசியம். விவசாயிகள் போராட்டத்திற்காக அவர்களின் மதிப்பு மிக்க விருதை திருப்பித் தரும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் நான் ஆதரிக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்தக் கருத்தில் இருந்து தான் விலகுவதாக தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார் யுவராஜ் சிங் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு கொரோனா தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் யுவராஜ் சிங் வலியுறுத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கமல், ரஜினியை அடுத்து சட்டமன்ற தேர்தலில் குதிக்கும் பிரபல ஹீரோ: தனிக்கட்சியா?

தமிழகத்தில் அரசியல் ஆளுமைகளாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் அடுத்தடுத்து காலமானதை அடுத்து ஆளுமைக்கான வெற்றிடம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

பீட்டர்பால் விவகாரம்: வனிதாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் வனிதா மீதும் கணவர் மீதும் பீட்டரின் முதல் மனைவி வழக்கு தொடர்ந்தார் 

ரத்தன் டாடா பயோபிக்கில் நடிக்கின்றாரா மாதவன்? அவரே அளித்த விளக்கம்!

இந்திய திரையுலகில் அவ்வப்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வரும் என்பதும், கிட்டத்தட்ட அனைத்து பயோபிக் திரைப்படங்களும் வெற்றி பெற்றுவருகிறது

நான் எதிர்பார்க்கவே இல்லை நிஷா: கமல் கேள்வியால் அதிர்ச்சி அடைந்த நிஷா

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு பேர் எவிக்சன் செய்யப்பட உள்ள நிலையில் அதில் ஒருவர் ஜித்தன் ரமேஷ் என்று வெளிவந்த செய்தியையும் பார்த்தோம்

திருமணக் கோலத்தில் சென்ற இளம் பெண்ணின் பின்னால் 6 கி.மீ தூரம் நாய் துரத்திய சம்பவம்!!!

சீனாவில் ஒரு இளம் பெண் தன்னுடைய திருமணத்தை முடித்துக் கொண்டு கணவன் வீட்டிற்கு செல்கிறார்