close
Choose your channels

ஒரே நேரத்தில் பதவி உயர்வு பெற்ற டி.ராஜேந்தர்-சிம்பு

Thursday, March 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனரும் லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தரும் அவருடைய மகனும் நடிகருமான சிம்புவும் ஒரே நேரத்தில் பதவியுயர்வு பெற்றுள்ளனர். அதாவது டி.ராஜேந்தர் தாத்தாவாகவும், சிம்பு மாமாவாகவும் பதவியுயர்வு பெற்றுள்ளனர்.
டி.ராஜேந்தரின் ஒரே மகளும் சிம்பு, குறளரசனின் சகோதரியுமான தமிழ் இலக்கியாவின் திருமணம் 2014ம் ஆண்டு சென்னையில் திருமணம் வெகுசிறப்பாக நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் கர்ப்பமான தமிழ் இலக்கியா நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. பேரன் பிறந்த தகவல் அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்த டி.ராஜேந்தர் மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அதேபோல் அவருடைய மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிலம்பரசன் மற்றும் குறளரசன் ஆகியோர்களும் தங்கள் குடும்பத்தின் புதுவரை வரவேற்று கொண்டாடினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.