close
Choose your channels

ஒரே நாளில் ரிலீஸாகும் சமந்தாவின் இரண்டு படங்கள்

Sunday, July 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடித்து வந்த '10 எண்றதுக்குள்ள' படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் அந்த படத்தின் கிளைமாக்ஸின் முந்தைய ஒருசிறு பகுதி மட்டுமே படமாக்கப்பட உள்ளது. இந்த படப்பிடிப்பும் இம்மாத இறுதியில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினம் என ஏற்கனவே அறிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த தேதிக்குள் படத்தின் அனைத்து வேலைகளையும் முடிக்க படக்குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\

இந்நிலையில் 10 எண்றதுக்குள்ள' திரைப்படம் ரிலீஸாகும் அதே தேதியில் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' படமும் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டன. வரும் 17ஆம் தேதி தனுஷின் மாரி ரிலீஸாகவுள்ள நிலையில் சுமார் இரண்டே மாத இடைவெளியில் தனுஷின் 'விஐபி 2' படமும் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10 எண்றதுக்குள்ள, விஐபி 2 ஆகிய இரண்டு படங்களிலும் நடிகை சமந்தா தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் முன்னணி நடிகை நடித்த இரு படங்கள், அதிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 10 எண்றதுக்குள்ள படத்தை விஜய் மில்டனும், விஐபி 2 படத்தை வேல்ராஜும் இயக்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.