close
Choose your channels

போதையுடன் கூடிய அதர்வாவின் அடுத்த பட டைட்டில்

Friday, April 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதர்வா முரளி நடித்த முதல் படமான 'பாணா காத்தாடி' படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் மீண்டும் அதர்வாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை அதர்வா புதியதாக தொடங்கிய தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'கிக் ஆஸ் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் சற்றுமுன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'செம போத ஆகாத' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மது பாட்டிலின் பின்னால் அதர்வா முரளி தாடியுடன் இருப்பதுபோல் இந்த பர்ஸ்ட்லுக் அமைந்துள்ளது. யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.
ஏற்கனவே 'சண்டி வீரன்', 'ஈட்டி', மற்றும் 'கணிதன்' ஆகிய மூன்று தொடர் வெற்றி படங்களில் நடித்த அதர்வாவுக்கு இந்த படம் நான்காவது வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.