close
Choose your channels

இனிமேல் சைலண்ட் மோட் தான்: ஆர்த்தியின் திடீர் முடிவு ஏன்?

Thursday, August 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய நடிகை ஆர்த்தி, வெளியே வந்தபின்னரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக தான் போலி என்று கூறிய ஜூலி உண்மையிலேயே போலியானவர் என்பதை மக்கள் புரிந்து கொண்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஆர்த்தி கூறியதாக சமூக வலைத்தளங்களிலும், யூடியூப் வீடியோவின் கமெண்ட்களிலும் பல தவறான செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதாகவும், அந்த நிகழ்ச்சி குறித்து தான் சொல்லாததை கூறி வருவதால் இனிமேல் ஒரு அமைதியான பார்வையாளராக மட்டும் இருக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தவறாக எதுவுமே கூறவில்லை என்றும் இனிமேல் கூற மாட்டேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் குறித்து அவர் எதுவும் கூறப்போவதில்லை என்று கூறினாலும், ஓவியாவுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பார் என்று நம்பப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.