close
Choose your channels

அதிமுகவை உடைக்க சதி நடக்கிறது. விஜயசாந்தி பேட்டி

Saturday, February 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகையும் தெலுங்கு மாநிலத்தின் அரசியல்வாதியுமான நடிகை விஜயசாந்தி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐதராபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் முதலில் ஒரு தெளிவை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காததற்கு இதுதான் காரணம் என்ற தெளிவான விளக்கத்தை அவர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். எதற்காக அவர் தாமதிக்கின்றார் என்றே தெரியவில்லை.

ஒருசில தீய சக்திகள் அதிமுகவை உடைக்க சதி செய்கிறது. இதற்கு இடம் கொடுக்க கூடாது என்பதே எங்களை போன்றவர்களின் கவலை. தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி வேண்டும். ஒரு நிரந்தரமான முதலமைச்சர் வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

எனவே வித்யாசாகர் நல்ல முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று நடிகை விஜயசாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.