close
Choose your channels

ஜெயலலிதா சமாதியில் தீபா திடீர் தியானம்

Monday, March 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்க்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்தார். தியானத்திற்கு பின்னர் அவர் கொடுத்த பேட்டி மெரீனாவில் ஏற்பட்ட சுனாமிக்கு இணையாக இருந்தது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்களால் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் மற்றும் முதல்வர் பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தது முதல் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

இந்நிலையில் மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதி கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த நிலையில் நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனருமான தீபா, ஜெயலலிதாவின் சமாதியில் திடீரென தியானம் செய்தார்.

சுமார் 45 நிமிடங்கள் தியானம் செய்த தீபா, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனக்கும் ஜெயலலிதாவுக்கு உள்ள உறவு தாய்-மகள் உறவுக்கு நிகரானது என்று கூறினார். மேலும் தான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் தனக்கு பல இடங்களில் இருந்து மிரட்டல் வருவதாகவும், ஆனால் அந்த தொகுதி மக்களின் பேராதரவு தனக்கு இருப்பதால் நிச்சயம் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.