close
Choose your channels

விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய பிரபல இயக்குனரின் மகன்கள்

Friday, July 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இந்த படம் குறித்த செய்திகள் தினமும் சமூக இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கோலிவுட் திரையுலகில் உள்ள விஜய்யின் தீவிர ரசிகர்களால் இந்த படத்திற்கு இலவச புரமோஷன்கள் கிடைத்து வருகிறது.

நேற்று பிரபல நடிகர் நாசரின் மகன் ஃபைசல் தனது காரில் விஜய்யின் 'மெர்சல்' டைட்டில் லோகோவை தனது காரில் வரைந்திருந்தார் என்று வெளிவந்த செய்தியினை பார்த்தோம். தற்போது பிரபல இயக்குனரின் இரண்டு மகன்கள் விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

'அச்சமுண்டு அச்சமுண்டு', 'பெருச்சாழி' படங்களை இயக்கிய இயக்குனர் அருண்வைத்தியநாதன் தற்போது அர்ஜூன் நடிக்கும் 'நிபுணன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இவருடைய இரண்டு மகன்கள் ஆதித் மற்றும் அத்வைத் ஆகியோர் விஜய்யின் ஆட்டோகிராபை பெற்றுள்ளனர். 'மெர்சல்' படம் போட்ட பனியனுடன் இருவரும் சந்தோஷத்துடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமா ருக்மணி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைபப்டம் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.