close
Choose your channels

'கடுகு' இயக்குனருக்கு பிரபல இயக்குனர் எழுதிய உணர்வுபூர்வமான கடிதம்

Friday, March 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கோலி சோடா', 10 எண்றதுக்குள்ள' ஆகிய படங்களின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கிய அடுத்த படமான 'கடுகு' இன்று வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளது. குறிப்பாக திரையுலகினர் இந்த படத்தை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன், 'கடுகு' இயக்குனருக்கு இந்த படம் குறித்து உணர்வுபூர்வமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
'கடுகு'. Engaging Entertainer Movie.. மில்டன் சார் அவர்களின் வசனங்கள் பல இடங்களில் என்னை கைதட்ட வைத்தது...
அனைத்து கதாபாத்திரங்களும் நேர்த்தியான தேர்வு. ராஜகுமாரன், பரத் இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சரியாக நடித்துள்ளனர். ராஜகுமாரன் அவர்களை கதாநாயகனாக வைத்து இப்படியொரு திரைப்படத்தை துணிச்சலுடன் இயக்கிய மில்டன் அவர்களை எவ்வளவு வேண்டுமென்றாலும் பாராட்டலாம். அவருடைய நம்பிக்கையும் கடின உழைப்பும் அவருக்கு பெரிய வெற்றியை தேடிதரும்
இப்படத்தை வெளியிடும் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இவ்வாறு இயக்குனர் சுசீந்திரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.