close
Choose your channels

'தளபதி 61' கதை இதுவா?

Wednesday, March 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இம்மாத இறுதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன்பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் கதை 'தந்தையை கொலை செய்த வில்லனை பழிவாங்கும் இரண்டு மகன்கள்' என்று கூறப்படுகிறது. கதையின் மையப்புள்ளி பல படங்களில் பார்த்ததுதான் என்றாலும் இதில் உள்ள ஒரு முக்கியமான சமூக பிரச்சனை மற்றும் மேக்கிங் ஆகியவை ரசிகர்களுக்கு முற்றிலும் புதியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். அட்லி இயக்கத்தில் உருவாகி இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துவருகிறது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.