close
Choose your channels

அமைச்சர் ஜெயகுமாருக்கு கூடுதல் பொறுப்பு. நிதியமைச்சரும் அவர்தான்

Thursday, February 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மீன் வளத்துறை அமைச்சராக இதுவரை இருந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு கூடுதலாக நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதால் அவருடைய துறையை இதுவரை முதல்வரே ஏற்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜெயகுமாருக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை ஜெயக்குமார் அவர்களே சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதித்துறை தவிர தமிழக முதல்வர் பழனிசாமி வசம் இருந்த திட்டம், ஊழியர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் ஆகிய துறைகளும் ஜெயக்குமார் வசம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுனர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.