close
Choose your channels

தீபாவின் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி

Friday, February 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாக நேற்றே கூறினார்.

இந்நிலையில் இன்று அவர் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவை என்பவதே அவருடைய புதிய கட்சியின் பெயர் ஆகும். இந்த கட்சியின் கொடியில் கருப்பு,சிவப்பு நிறத்தில் நடுவில் வெள்ளை வட்டம். அதில் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் செங்கோல் கொடுத்த படம் பொறிக்கப்பட்டுள்ளது.

கட்சி மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைத்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, 'உண்மையான அதிமுக தொண்டர்கள் தன்னுடைய பின்னால் உள்ளதாகவும், இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கண்டிப்பாக மீட்பேன் என்றும் கூறினார். மேலும் ஜெயலலிதா எந்த தவறும் செய்யாதவர் என்று கூறிய தீபா, எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவையின் பொருளாளராக செயல்படவுள்ளதாகவும், வரும் இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகரில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.