close
Choose your channels

இந்த அரசு யாருக்கான அரசு என்பதே கேள்விக்குறியாக உள்ளது. பா.ரஞ்சித்

Saturday, September 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மருத்துவ படிப்பு கனவு கலைந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவுக்கு கோலிவுட் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நேற்று ஜி.வி.பிரகாஷ் அரியலூர் சென்று அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பதை பார்த்தோம், இந்த நிலையில் இன்று 'கபாலி', 'காலா' இயக்குனர் ரஞ்சித் அனிதாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், 'மாணவி அனிதா என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதை நோக்கி நகரும் வகையில் கடுமையாக உழைத்துள்ளார். ஆனால் அவருடைய முயற்சியை, கனவை நசுக்கும் வகையில் நீட் போன்ற ஆயுதங்களை தயார் செய்து கொண்டே இருக்கின்றனர்.

ஐஐடியில் எப்படி சாதாரணமானவர்களை நுழைய முடியாமல் செய்தார்களோ, அதே மாதிரியான ஒரு சிஸ்டத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி எளிய மக்களின் கனவை சிதைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர். இந்த அரசு யாருக்கான அரசு என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

அனைத்து வகையிலும் முயற்சி செய்துவிட்டு அதில் தோல்வி அடைந்ததால் கடைசியில் இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று வெறுப்படையும் நிலைக்கு அனிதா தள்ளப்பட்டுள்ளார். இந்த வலியை நாம் என்று உணரப்போகின்றோம் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.