close
Choose your channels

'இனியொரு சிலை செய்வோம்'! சிவாஜிக்காக கமல் பதிவு செய்த டுவீட்

Friday, August 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தினமும் சில கருத்துக்களை ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் பகிர்ந்து கொள்கிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவர் பதிவு செய்த ஒரு டுவீட்டில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். சென்னை மெரீனாவில் இருந்து சிவாஜி சிலையை நேற்று முன் தினம் இரவு திடீரென நீக்கப்பட்டதில் வருத்தமடைந்த ஆயிரக்கணக்கான சிவாஜி அபிமானிகளில் கமலும் ஒருவர் என்பதை அவரது டுவீட்டில் இருந்து உணர முடிகிறது.

'சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம் அரசுக்குமப்பால் என் அப்பா'. இதுதான் கமலின் நேற்றைய டுவீட்.

சிவாஜியின் குடும்பத்தில் ஒருவராக கமல் வாழ்ந்து வருவதால் அப்பா என்று உரிமையுடன் முடித்துள்ளார். இனி ஒரு சிலை செய்வோம் என்று அவர் கூறியதில் இருந்து கமல்ஹாசன், சிவாஜிக்காக ஒரு சிலையை செய்வாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. கமல் அதை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம் அரசுக்குமப்பால் என் அப்பா

— Kamal Haasan (@ikamalhaasan) August 3, 2017

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.