close
Choose your channels

தூங்கும் அரசு, செவிடர் காதில் ஊதிய சங்கு: கமல்ஹாசனின் காட்டமான டுவீட்டுக்கள்

Monday, September 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அவருடைய கருத்துக்களும் முன்பை விட தற்போது கொஞ்சம் காட்டமாகவே வெளிப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவன் பார்கவ் என்பவர் டெங்கு காயச்சல் காரணமாக  உயிரிழந்தார். 

கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதியே கமல்ஹாசன் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்தார். இந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் பார்கவ் மாணவனையும் சேர்த்து தமிழகத்தில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து கொஞ்சம் காட்டமாக நேற்று தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசன் கூறியதாவது:

'செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்'

'அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்'

இந்த டுவீட்டுக்களுக்கு பின்னராவது அரசு விழித்தெழுந்து டெங்கு காயச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.