close
Choose your channels

நயன்தாராவின் திடீர் போர்ச்சுக்கல் பயணம் ஏன்?

Saturday, May 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்த நிலையில் நேற்றிரவு அவர் திடீரென போர்ச்சுக்கல் கிளம்பி சென்றார். அவர் நீண்டகாலமாக தாமதமாகிக்கொண்டிருந்த தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக போர்ச்சுக்கல் சென்றுள்ளதாக தெரிகிறது.

பி.கோபால் இயக்கத்தில் கோபிசந்த் நடித்து வரும் தெலுங்கு திரைப்படம் 'பாலம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும், நயன்தாராவின் தேதி கிடைக்காமல் இரண்டு பாடல்கள் மட்டும் பெண்டிங் இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை முடித்து கொடுக்கும் நோக்கத்தில் சமீபத்தில் இந்த படத்திற்காக நயன்தாரா, கால்ஷீட் கொடுத்தார். அதன் காரணமாகவே இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக நேற்று போர்ச்சுக்கல் பறந்தார்.

போர்ச்சுக்கல் நாட்டின் இயற்கை எழில்கொஞ்சும் லிஸ்பன், போர்ட்டோ, அல்கார்வ், அவியாரா மற்றும் எரிசிரா போன்ற பகுதியில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

கோபிசந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம், கோட்டா ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு மணிஷர்மா இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.