close
Choose your channels

மாதந்தோறும் குண்டு வெடிக்கும்! நீட் போராட்டக்காரர்கள் அனுப்பிய மொட்டை கடிதமா?

Wednesday, September 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அனிதாவின் மரணத்திற்கு பின்னர் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் பரபரப்பில் உள்ளது. இந்த நிலையில் சென்னை ரயில் நிலையத்திற்கு ஒரு மொட்டை கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில் நீட் தேர்வை திரும்ப பெறும் வரை மாதந்தோறும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படும் என எழுதியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் மாதந்தோறும் குண்டுவெடிக்கும் என எச்சரிக்கை விடுத்திருப்பது நீட் தேர்வுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களா? அல்லது போராட்டத்தை திசை திருப்ப விஷமிகள் செய்த வேலையா? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியும்.

லட்சக்கணக்கான மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு சிறு வன்முறை கூட இல்லாமல் சுமார் பத்து நாட்களுக்கும் மேல் நடந்தது. எனவே மாணவர்கள் வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு செல்ல மாட்டார்கள் என்பதே அனைவரின் நம்பிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் இந்த மொட்டை கடிதம் அனுப்பியது யார் என்பதை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.