close
Choose your channels

ஈசிஆர் சாலையில் இணையும் விஜய்யின் இரண்டு படங்கள்

Friday, July 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை அருகேயுள்ள ஈசிஆர் சாலையில் நடைபெற்று வருகிறது என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் அதே ஈசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில், விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி 'புலி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அதிகாரபூர்வமாக படத்தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவின் முன்னேற்பாடுகள் ஈசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் நடந்து வருவதாக அவருடைய தரப்பினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

மேலும் 'புலி' படத்தின் இந்த பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவை தமிழின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஒளிபரப்ப உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 'ஏண்டி ஏண்டி' என்ற 'புலி' படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை 5மணிக்கு இணையதளத்தில் வெளியாகவுள்ளதாக 'புலி' படத்தின் ஆடியோ ரைட்ஸ் பெற்ற சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாடலை விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் செப்டம்பரில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.