தமிழ் »
Headline News »
போயஸ் கார்டன் இல்லத்தை 24 மணி நேரத்தில் கைப்பற்ற வேண்டும். பிரபல அரசியல் கட்சி தலைவர்
போயஸ் கார்டன் இல்லத்தை 24 மணி நேரத்தில் கைப்பற்ற வேண்டும். பிரபல அரசியல் கட்சி தலைவர்
Saturday, February 11, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் சசிகலாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை. மேலும் அவர் ஆட்சி அமைக்க வாய்ப்பு குறைவு என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆட்சி மட்டுமின்றி அவர் தற்போது இருக்கும் போயஸ் கார்டன் வேதா இல்லமும் விரைவில் கைப்பற்றப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக கையெழுத்து இயக்கம் ஒன்றை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ஆரம்பித்தார் என்று வெளிவந்த செய்தியை சற்று முன் பார்த்தோம்.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 'ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும் என்றும் இதற்காக போயஸ் கார்டன் இல்லத்தை 24 மணி நேரத்தில் அரசு கைப்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிப்பது குறித்து கூறுகையில், 'மக்களால் தேர்வானவர்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.