close
Choose your channels

'பவர்பாண்டி' தனுஷூக்கு வாழ்த்து கூறிய இருமேதைகள்

Sunday, April 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங் நடித்த 'பவர்பாண்டி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.மேலும் இந்த படத்தை ரஜினிகாந்த் உள்பட கோலிவுட் பிரபலங்களும் பாராட்டி வருவதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் தனுஷூக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 'பவர் பாண்டி' மனதை தொடும் ஒரு எளிய படைப்பு. தனுஷின் டீமுக்கு வாழ்த்துக்கள். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்பட அனைவரும் நடிப்பும் அருமை' என்று ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார்.

அதேபோல் மற்றொரு பிரபல இயக்குனரான கவுதம் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இயக்குனர் குடும்பத்திற்கு தனுஷை வரவேற்கின்றோம். ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் 'பவர்பாண்டி'. தனுஷூக்கு ஒரு வேண்டுகோள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்குங்கள். பவர்பாண்டி மற்றும் பூந்தென்றலுக்கு அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளோம்' என்று கூறியுள்ளார்.

கோலிவுட்டின் இரண்டு பெரிய மேதைகள் தனுஷ் இயக்கிய முதல் படத்தை பாராட்டியதே அவர் இயக்குனர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை நிரூபித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.