close
Choose your channels

வேலைநிறுத்தம் வாபஸ் எதிரொலி: தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய அறிக்கை

Friday, July 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி ஆகிய இரட்டை வரிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கள் முதல் திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்த நிலையில் நேற்று இதுகுறித்து தமிழக அரசுடன் திரையுலக பிரபலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், இதில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்ட செய்தியையும் பார்த்தோம். இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாள்ர் சங்கம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசுடன் இன்று (06.07.2017) நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் திரையுலகின் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலிக்க திரைத்துறையை சார்ந்த 6 நபர்களை உள்ளடக்கிய இடைக்கால குழு ஒன்றினை அமைத்து விரைவில் தீர்வு எட்டப்படும்
மேலும் பல்வேறு வேலைப்பளுக்களுக்கிடையே தங்களது நேரத்தினை ஒதுக்கி எங்களது திரைத்துறையின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து மேற்கண்ட தீர்வு காண உறுதுணையாக இருந்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கும், நிதித்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கும், வணிகத்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களுக்கும், மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.எஸ்.பி வேலுமணி அவர்களுக்கும் எங்களது தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற திடீர் திரையரங்க வேலைநிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களின் திரைப்படங்களும் மீண்டும் நாளை முதல் தொடரும் என்று நம்புகிறோம். இதற்கு ஒத்துழைப்பு தந்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கும் எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் திரைத்துறையின் நலன் கருதி திரைத்துறைக்கு ஆதரவாக ஒன்றாக செயல்பட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், மற்றும் தென்னிந்திய திரைப்பட மற்றும் டெலிவிஷன் கில்ட் செளத் ஆப் இந்தியா ஆகியவற்றுக்கு எங்களது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் இந்த திரையரங்க வேலைநிறுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் பாதிப்படைந்திருந்தபோதும்ன் இந்த திரைத்துறையின் நலன் கருதி பொறுமைகாத்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் திரைத்துறையினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிரோம்
இவ்வாறு தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.