close
Choose your channels

கீர்த்திசுரேஷை தேர்வு செய்தது ஏன்? விக்னேஷ் சிவன் விளக்கம்

Wednesday, July 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் முடிவடையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி முதலில் நயன்தாரா என்று கூறப்பட்ட நிலையில் கீர்த்திசுரேஷ் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் விக்னேஷ் சிவன், ''இந்த படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி வெறும் வதந்தியே என்றும், இந்த படத்தின் கதைப்படி கீர்த்தி சுரேஷ் ஒரு மிடில்கிளாஸ் பெண்ணாக நடிப்பதாகவும், இதுவரை சூர்யாவுடன் நடிக்காத ஒரு ஹீரோயினாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கார்ணத்தால் அவர் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இந்த படத்தின் கதையில் அரசியல் இல்லை என்று கூறிய விக்னேஷ் சிவன், இந்த கதை சூர்யாவுக்காகவே உருவாக்கப்பட்ட புதிய களம் என்றும், அவரை இதுவரை ஏற்காத வேடத்தில் பொருத்தியிருப்பதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.