close
Choose your channels

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது

Tuesday, April 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா சற்று முன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். லண்டனில் தங்கியிருந்த விஜய்மல்லையா ஸ்காட்லாந்துயார்டு போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிரிமினல் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த வழக்கில் இருந்து தப்பிக்க தனது சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கடந்த ஆண்டு மார்ச் மாதம் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி செய்தது. ஆனால் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற இங்கிலாந்து அரசு, தனது நாட்டின் சட்டவிதிகளை காரணம் காட்டி மறுத்துவிட்டது.
இந்த நிலையில் இண்டர்போல் உதவியை நாடிய மத்திய அரசு விஜய்மல்லையாவை கைது செய்யும் வகையில் ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்ப கேட்டுக்கொண்டது. இதுகுறித்து இண்டர்போல் கேட்ட ஆதாரங்களையும் மத்திய அரசு சமர்ப்பித்தது.
மத்திய அரசின் ஆதாரங்களின் அடிப்படையில் சற்று முன்னர் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்துயார்டு போலீஸார் கைது செய்தனர். அவர் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.