close
Choose your channels

'புலி' படத்தின் விஜய்-ஹன்சிகா காதல் பாடல்

Sunday, August 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'புலி' படத்தின் அறிமுகப்பாடலின் வரிகளை நேற்று கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை பார்த்தோம். ஏற்கனவே விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் பாடிய 'வானவில் வட்டமாகுதே' என்ற பாடலின் வரிகளை பார்த்து விட்டோம். இந்நிலையில் இந்த படத்தின் இன்னொரு நாயகியான ஹன்சிகாவுடன் விஜய் பாடும் ஒரு டூயட் பாடலின் வரிகளை தற்போது பார்ப்போம்.

காதல் ரசம் சொட்ட சொட்ட அமைந்துள்ள இந்த பாடலை பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் பாடகி எம்.எம்.மானசி ஆகியோர் பாடியுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் ஒலி வடிவில் நீங்கள் கேட்கவிருக்கும் இந்த அழகான, மெலடியான டூயட் பாடலின் வரிகளை தற்போது பார்ப்போம்.

விஜய்-ஹன்சிகா காதல் பாடல்

பல்லவி:

ஆண் : சொட்டவாள சொட்டவாள
சொட்டவாளக் குட்டிபோல
சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி

கண்ணப்பாரு கண்ணப்பாரு
கன்னிப்பொண்ணு கண்ணப்பாரு
கள்ளுக்குள்ள ஊறவச்ச முந்திரி

சுண்டினாலே ரத்தம் வந்திரும் – உன்தங்கமேனி
சுத்தமான வெள்ளத் தோலுடி
இந்தவண்ணம் வந்ததெப்படி – என்குட்டிராணி
குளிப்பது கழுதைப்பாலுடி

மைவிழியே மையலாச்சு

நெத்திப்பொட்டில் முத்தம் வைக்க
நெஞ்சுக் கூட்டில் தலையை வைக்க
புத்திமாறித் தத்தளிக்கிறேன்

பன்னீர் நதியில் ரோஜாப் படகில்
பயணம் போவோம் வா
வாடி செல்லம் தித்திக்கும் வெல்லம்
வாயோடு நீயுண்ணவா

சரணம் 1:

பெண் : ஏ ராஜ மார்த்தாண்டனே

நான் மச்சம்உள்ள மானு
நீ மட்டும் தானே ஆணு
என் தேகம் எங்கும் தேனு
நீ எச்சில் பண்ணாதே

ஆண் : அடி சீனிச் சிங்காரியே

நீ கால்மொளச்ச மீனு
ஓங் காலுரெண்டும் தூணு
ஒங் கச்சுக்குள்ள தேனு
நீ தப்பிச் செல்லாதே

பெண் : கண்ணாலே கர்ப்பம் செய்யாதே
கன்னம்தொட்டுக் கன்னம்தொட்டுக் கன்னம் வைக்காதே

ஆண் : நல்லால்லே எண்ணம் நல்லால்லே
நாணம் மட்டும் கட்டிக்கொள்ளு ஆடை நல்லால்லே

பெண் : பன்னீர் நதியில் ரோஜாப் படகில்
பயணம் போவோம் வா
வாடா செல்லம் வாலிப வெல்லம்
வாயோடு நீயுண்ணவா

சரணம் 2:
ஆண் : வாடி சிந்தாமணி

நீ அத்தை பெத்த திண்ண
நான் வச்சுக்கிர்றேன் ஒன்ன
ஒரு இச்சுக்குடு முன்ன
நீ எட்டிச் செல்லாதே

பெண் : வீர மாவேந்தனே

நீ வெட்டிவச்ச தேக்கு
என் வெத்தலைக்குப் பாக்கு
அட ஊறுதடா நாக்கு
நீ ஓடிப் போகாதே

ஆண் : பந்தாலே ரோஜாப் பந்தாலே
பச்சநெஞ்சப் பச்சநெஞ்சப் பத்த வைக்காதே

பெண் : கண்ணாலே கத்திக் கண்ணாலே
கன்னிப்பொண்ணு அந்தரங்கம் கொத்திச் செல்லாதே

ஆண் : பன்னீர் நதியில் ரோஜாப் படகில்
பயணம் போவோம் வா
வாடி செல்லம் தித்திக்கும் வெல்லம்
வாயோடு நீயுண்ணவா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.