close
Choose your channels

கடலூரில் விஷாலின் வெள்ள நிவாரண பணிகள்

Thursday, November 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக பொறுப்பேற்ற நடிகர் விஷால் காவிரி பிரச்சனை, இலங்கை தமிழ் பிரச்சனை உள்பட எந்த பொதுப்பிரச்சனைகளிலும் நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறியிருந்தார். ஆனால் அதே சமயத்தில் அவர் தனிப்பட்ட முறையில் செய்து கொண்டிருக்கும் சமூக சேவைகள் எப்போதும்போல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து பல பகுதிகளில் வெள்ளக்காடாக இருப்பதை அறிவோம். குறிப்பாக கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி அங்கு வாழும் மக்கள் அதிகம் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் விஷால் தனது கடலூர் மாவட்ட ரசிகர் மன்றத்தின் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு, உடை மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.