close
Choose your channels

நர்ஸ்கள் உடை மாற்றும் அறையில் கேமிரா: தனியார் மருத்துவமனை ஊழியர் கைது

Saturday, December 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸ்கள் உடைமாற்றும் அறையில் கேமிரா வைத்த துப்புரவு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிவர் பிரகாஷ். இவர் துப்புரவு ஊழியர் என்பதால் இவருக்கு மருத்துவமனையில் உள்ள எல்லா அறைகளுக்கும் செல்ல உரிமை உண்டு.

இந்த நிலையில் உடைமாற்றும் அறைக்கு துப்புரவு செய்ய செல்ல முயன்றபோது அங்கே நர்ஸ் ஒருவர் உடைமாற்றுவதை பார்த்து சபலம் அடைந்துள்ளார். இதனையடுத்து தினமும் அதே நேரத்தில் சென்று நர்ஸ்கள் உடையணிவதை ஒளிந்திருந்து பார்த்த இவர் தனது மொபைல் போனிலும் படம் பிடித்துள்ளார்.

மேலும் இரவில் தனது மொபைல் போனை அந்த அறையில் ஒளித்து வைத்து காலையில் அதில் பதிவாகி இருக்கும் வீடியோவை பார்த்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று நர்ஸ் ஒருவர் உடைமாற்றும்போது அந்த அறையில் கேமிரா இருப்பதை உணர்ந்து, கேமிராவை கண்டுபிடிக்கும் செயலி மூலம் கேமிரா இருப்பதை உறுதி செய்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது, பிரகாஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.