close
Choose your channels

கல்லூரி வளாகத்தில் பீர்பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட மாணவிகள்: வைரலாகும் வீடியோ

Sunday, February 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒடிசா மாநிலத்தில் புரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் கையில் பீர் பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் புரியில் உள்ள சமந்த சந்திர சேகரா என்ற கல்லூரி மாணவிகள் சிலர் கல்லூரி வளாகத்திலேயே கையில் பீர் பாட்டிலுடன் குத்தாட்டம் போட அதனை மற்ற மாணவ, மாணவிகள் வேடிக்கை பார்க்கின்றனர். மேலும் இந்த வீடியோ சரஸ்வதி பூஜை நாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் கல்லூரி நிர்வாகம் இதனை மறுத்துள்ளது. இதுகுறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் மாணவ, மாணவிகள் தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வீடியோவில் கையில் பீர் பாட்டிலுடன் உள்ள மாணவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவின் பழமையான, மதிப்பு மிகுந்த கல்லூரிகளில் ஒன்றிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது குறித்து அந்த பகுதி மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.