close
Choose your channels

கொரோனா உறுதி செய்யப்பட்டது தெரியாமலே முதியவரின் உடலுக்கு இறுதிசடங்கு செய்த உறவினர்கள்!!!

Friday, September 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா உறுதி செய்யப்பட்டது தெரியாமலே முதியவரின் உடலுக்கு இறுதிசடங்கு செய்த உறவினர்கள்!!!

 

சென்னை அடுத்த மணிலியில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட விஷயம் தெரியாமலே உறவினர்கள் ஒன்றுகூடி இறுதிச் சடங்கு செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மணலி அடுத்த புதுநகரில் 62 வயது முதியவரும் அவரது மனைவியும் வசித்து வந்திருக்கின்றனர். நேற்றுமுன்தினம் முதியவரின் மனைவிக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் தம்பதி இருவரும் புதுநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு தம்பதி இருவருக்குமே கொரோனா உறுதிச்செய்த மருத்துவர்கள் அவர்களுக்கு மாத்திரைகளைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

வீட்டுக்கு வந்த முதியவருக்கு அன்று இரவே நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்து இருக்கிறார். இந்நிலையில் முதியவருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டது தெரியாமலே அவரது மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள் எல்லாம் ஒன்றுகூடி எப்போதும் போல இறுதிச் சடங்குகளை செய்திருக்கின்றனர். அப்போது திடீரென மாநகராட்சி ஊழியர்கள் முதியவர் உயிரிழந்த விஷயம் தெரியாமலே அவரைத் தேடி வீட்டுக்கு வந்திருக்கின்றனர். வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

இறந்த முதியவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இப்படி பாதுகாப்பு இல்லாமல் இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூடாது. நாங்களே உடலை உரிய பாதுகாப்புடன் அடக்கம் செய்வோம். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருக்கிறது எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கின்றனர். மாநகராட்சி ஊழியர்களின் பேச்சைக் கேட்ட உறவினர்கள் உடலை அப்படியே விட்டுவிட்டு நகர்ந்து நின்று அழ ஆரம்பித்து இருக்கின்றனர். இப்படியே மாலை 5 மணி ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் முதியவரின் மனைவி கடும் கூச்சல் போட்டிருக்கின்றார். இதனால் உறவினர்கள் எல்லாம் ஒன்றுகூடி சாலை மறியலிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கடைசியில் உடலை உறவினர்களே அடக்கம் செய்ய முடிவுசெய்து எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முற்பட்டபோது படு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று முதியவரின் உடலை எந்தப் பாதுகாப்பும் இல்லாம் தூக்கிக்கொண்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகத் தகவல் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் அலட்சியத்துடன் நடந்துக் கொண்டதாகப் பலரும் குற்றம் சாட்டியிருக்கின்றனர். அதேநேரத்தில் கொரோனாவையும் பொருட்படுத்தாத உறவினர்கள் இடுகாடு வரைக்கும் உடலை எடுத்துச் சென்ற விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் புதுநகர் பகுதியில் 6 மணி நேரத்திற்கும் மேலாக கடும் பதட்டம் நிலவியதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.